கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட நாய்கள்...ஆயிரக்கணக்கில் அழுகிய நாய்களின் சடலம் - 60 வயது முதியவரின் மிருக செயல்

x

தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான நாய்கள் கொடூரமாக அடித்து, பட்டினி போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...யாங்பியாங் நகரைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன தனது நாயை வீடு வீடாக தேடிய போது, ஒரு வீட்டில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு மிகவும் கொடூரமாக கொடுமைப்படுத்தப்பட்டதைக் கண்டுள்ளார்... தகவலறிந்து வந்த விலங்கு நல ஆர்வலர்கள், அந்த வீட்டின் பின்புறத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் அழுகிய நாய்களின் உடல்களைக் கண்டறிந்தனர்... இதற்குக் காரணமான 60 வயது நபர் உபயோகமில்லாத நாய்களை உரிமையாளர்களிடம் இருந்து பராமரிப்புத் தொகையுடன் வாங்கி, அவற்றிற்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்