தெரு நாய்கள் மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ - வேலூர் மாநகராட்சி விளக்கம்

x

வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தெரு நாய்களை கொடூரமான முறையில் தாக்கி பிடிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வேலூர் வசந்தபுரம் பகுதியில் தெரு நாய்களைக் கொன்று பிடிப்பது போன்ற வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியானது.

அதற்கு விலங்குகள் நல ஆர்வலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வேலூரில் தற்போது நாய்கள் பிடிக்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அந்த வீடியோ வேலூரில் எடுக்கப்பட்டது அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்