வீட்டில் தனியாக இருந்த தம்பதி மீது கொடூர தாக்குதல்

x

வீட்டில் தனியாக இருந்த தம்பதி மீது கொடூர தாக்குதல்

கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கங்கசந்தரம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ரவி மற்றும் ரோஜா. இருவரும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், வேலு என்பவர் தனது நண்பர்களுடன் வந்து இருவரையும் தாக்கி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, படுகாயம் அடைந்த தம்பதியினரை மீட்ட அப்பகுதியினர், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். புகாரின்பேரில், 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த குருபரப்பள்ளி போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்