வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசையில் இளைஞர்கள் செய்த கொடூர செயல்...

x

விருதாச்சலம் பில்லூர் சோதனை சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய 2 இளைஞர்கள் பிடித்து விசாரிக்கப்பட்டனர். காட்டு மன்னார் கோவிலை சேர்ந்த முகமது ஷாஜகான், முகமது பாரீத் ஆகிய இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 4 மாதங்களாக இருவரும் செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அதன் மூலம் வெளிநாடு செல்ல பணம் சேர்த்து வந்தும் அம்பலமானது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 8 சவரன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்