கண்மாய்க்கு குளிக்க சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி..

x

திருச்சி, மணப்பாறை அருகே கண்மாய்க்கு குளிக்க சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த வைரம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு 13 வயதில் லோகநாதன் மற்றும் 7 வயதில் தருண் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எத்த வேளங்கண்மாயில் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சகோதரர்கள் இருவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இந்த துயரச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்