காதலனோடு விடுமுறை கொண்டாடிய தங்கை... லவ் ஸ்டோரியை, க்ரைம் ஸ்டோரியாக்கிய அண்ணன்...

x

கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் சக்திவேல். 23 வயதாகிறது. சேலம் மாவட்டம் , வாழப்பாடி அருகேயுள்ள துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்தவர். கொத்தனாராக வேலைப் பார்த்துவந்த சக்திவேல் கடந்த ஒரு வருடமாக கோவில்வாசலில் பூ வியாபாரம் செய்துவந்திருக்கிறார். சம்பவத்தன்று மாலை, மூன்று மணியளவில் பூக்கடையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார் சக்திவேல்.அப்போது, இருசக்கர வாகனத்தில் திடீரென சக்திவேலை வழிமறித்த மர்ம கும்பல் ஓன்று, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றிருக்கிறார்கள்.. நடந்த தாக்குதலில் சக்திவேலின் கழுத்தில் ஆழமான வெட்டு விழுந்து உடல் முழுவதும் ரத்தம் பீரித்திருக்கிறது.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்ட ஊர்காரர்கள், சக்திவேலை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாகிகள் குறித்த விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள். அதில், காதல் விவகாரத்தில் சக்திவேல் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன்வரை சென்று திரும்பி இருப்பது தெரியவந்தது.அந்த வழக்கில் சக்திவேல் மீது புகார் கொடுத்த சதீஷ்குமார் என்பவரை சுற்றிவளைத்த போலீசார் தங்கள் பாணியில் விசாரித்திருக்கிறார்கள். அதன்பிறகு தான் நடந்த கொலைக்கான முழுக் குற்றப்பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஆம், சதீஷ்குமார்தான் அந்த கொலை குற்றவாளி... சதீஷ்குமாரின் சித்தி வீடு கொல்லப்பட்ட சக்திவேலின் வீட்டிற்கு அருகிலேயே இருந்திருக்கிறது...சதீஷ்குமாரும் அவரது 17 வயது தங்கையும் விடுமுறையை கொண்டாட அவ்வப்போது சித்திவீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அப்போது, சதீஷ்குமாரின் தங்கைக்கும், சக்திவேலுக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் ஒருவருடமாக வாட்ஸ்ப் சேட்டிங், ஓயாத போன்கால் என காதலை வளர்த்து வந்திருக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம் காதலியின் வீட்டிற்கு தெரியவர காதலை கைவிடுமாறு கண்டித்திருக்கிறார்கள். ஆனால், காதலர்கள் தங்களது காதலில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். காதலிக்கு 18 வயது நிறம்பாததால் சிறுமியின் குடும்பத்தினர் சக்திவேல் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக இவர்களின் காதல் விவகாரம் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் பேசி பைசல் செய்யப்பட்டிருக்கிறது.

இருந்தபோதும் சிறுமியின் அண்ணன் சதீஸ்குமாருக்கு, சந்திவேல் மீதிருந்த ஆத்திரம் அடங்கவில்லை... சம்பவத்தன்று சக்திவேலுக்கு உயிர்பயத்தை காட்ட நினைத்த சதீஷ்குமார், இரண்டு நண்வர்களுடன் சேர்த்து தங்கையின் காதலனை அரிவாளால் வெறித்தீர தாக்கியிருக்கிறார். இதில், பலத்த வெட்டு காயமடைந்த சக்திவேல் பரிதாபமாக இறந்துப்போயிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் உள்பட மூன்றுபேரை கைதுச் செய்த போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்