"அண்ணனுக்கு பயம் இல்ல இதான் Sample" வெள்ளத்தில் சிக்கிய படகை உயிரை பணையம் வைத்து மீட்டெடுத்த Owner..

x

கேரளாவில் வெள்ளத்தில் அடித்து சென்ற தனது சிறிய படகை மழை வெள்ளத்தில் குதித்து, உரிமையாளர் ஒருவர் மீட்ட காட்சி, வைரலாகி வருகிறது. அங்கு கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள வெண்ணிகுளம்-கோமளம் இரும்பு பாலத்தின் அருகே ராமச்சந்திரன் என்பவர் தனது சிறிய ரக படகை கயிற்றில் கட்டி வைத்துள்ளார். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் படகு அடித்து செல்லப்பட்டது. இதனை அறிந்த ராமச்சந்திரன், உடனடியாக சென்று இரும்பு பாலத்தின் மேல் இருந்து வெள்ளப்பெருக்கில் குதித்து தனது படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.இந்த காட்சி வலைதளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்