வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகைகள் கொள்ளை... பக்கத்து வீட்டுப்பெண் அளித்த தகவலால் விரைந்த போலீசார்

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ராஜாராம் என்பவர், கடந்த 21-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்திருப்பதை கண்டு, பக்கத்து வீட்டு பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக அந்த பெண் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர்.

அதில், வீட்டின் பீரோவில் இருந்த 12 சவரன் நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்