ராணி எலிசபெத் மறைவால் ஒன்றாக இணைந்த பிரிட்டன் இளவரசர்கள்..!

x

இங்கிலாந்து ராணி மறைவை அடுத்து இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி தங்களது மனைவியுடன் மக்களை சந்தித்து துக்கத்தை பகிர்ந்து கொண்டனர்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த‌தால், பக்கிங்ஹாம் அரண்மனை, வின்ஸ்டர் கேஸ்டில் அணைமனை முன்பு ஏராளமான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேத் மிடில்டன், இளவரசர் ஹாரி அவரது மனைவி மெகன் மெர்கல் ஆகியோர், கருப்பு உடை அணிந்து ஒன்றாக வின்ஸ்டர் கேஸ்டில் அரண்மனைக்கு வந்தனர்.

அவர்கள், பொதுமக்களால் வைக்கப்பட்ட பூக்கள், மலர் வளையங்களை பார்வையிட்டனர்.

பின்னர், அங்கு கூடியிருந்த பொதுமக்களை 4 பேரும் சந்தித்து, தங்களது துக்கத்தை பகிர்ந்து கொண்டனர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு இளவரசர்களை ஒன்றாக பார்த்த‌து மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்