"வீட்டுக்கு வரவழைத்து.." பாஜக அமைச்சர் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் புகார்...

x

பெண் பயிற்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சந்தீப் சிங்... இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான இவர் மீது, ஜூனியர் தடகள பயிற்சியாளராக இருக்கும் பெண், சண்டிகர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். அதில், சான்றிதழ்களை சரிபார்ப்பதாகக் கூறி அமைச்சர் சந்தீப் சிங், தன்னை அவரது இல்லத்துக்கு வர வைத்ததாகவும், அங்கு தன்னை பாலியல் ரீதியாக அமைச்சர் சீண்டியதாகவும் தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில், 5 பிரிவுகளின் கீழ் அமைச்சர் சந்தீப் சிங் மீது, சண்டிகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மற்ற வீராங்கனைகளுக்கும் சந்தீப் சிங் பாலியல் தொல்லை தந்ததாக பெண் பயிற்சியாளர் கூறியுள்ள நிலையில், குற்றச்சாட்டுகளை அமைச்சர் சந்தீப் சிங் மறுத்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்