கட்டி முடிக்கப்பட்டு ஒரே நாளில் சேதமான தரைப்பாலம் - அதிர்ச்சியில் மக்கள்

x

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம், பயன்பாட்டுக்கு வந்த ஒரே நாளில் சேதம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் திருவள்ளுவர் காலனி அருகே பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்து தரைப்பாலம் புதன்கிழமை பயன்பாட்டிற்கு வந்தது. வியாழக்கிழமை காலை தரைப்பாலத்தின் நடுவே திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாலத்தின் மீது செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஒப்பந்ததாரர் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு தரைப்பாலத்தைக் கட்டியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்