திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் மாப்பிள்ளையும் விபரீத முடிவு..!

x

மாம்பாக்கம் அடுத்த பொன்மார் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், கடம்பூர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் இடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திவ்யா தற்கொலை செய்து கொண்டார். இதில் மனமுடைந்த கார்த்தி, மாம்பாக்கம் காட்டு பகுதியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 2 முறை கார்த்திக்கு நிச்சயம் செய்து திருமணம் வரை சென்ற நிலையில், பெண் வீட்டிலிருந்து திருமணம் தடை செய்யப்பட்டது. தற்போது மூன்றாவதாக முறையாக, திருமணம் தடைபடவே, மனமுடைந்த கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், திவ்யாவிற்கு வீட்டில் கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததால், தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்