கூகுள் பே மூலம் லஞ்சமா? - சுகாதாரத்துறை ஆய்வாளரிடம் அதிரடி விசாரணை

x

தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட கடைகளில் வணிக உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த கடைகளில் ஆண்டுதோறும் வணிக உரிமம் புதுப்பிக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படும் நிலையில், அதன் பணியில் வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, செல்போன் கடைக்காரரிடமிருந்து சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கூகுள்பே மூலம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தாம்பரம் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் சுப்பையாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்