தாசில்தார் அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்.. கண்ணாடி உடைத்து அராஜகம் - தீயாய் பரவும் வீடியோ

x

திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் கத்தியுடன் வந்த நபர், ஜன்னல்களை உடைத்து, அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த‌து பரபரப்பை ஏற்படுத்தியது. புட்டிபுலத்தை சேர்ந் தனசேகர் என்பவர், வருவாய் ஆய்வாளரை பார்க்க வேண்டும் என்று வருவாய்த்துறை ஊழியரிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நில அளவை வட்டத் துணை ஆய்வாளர் வெங்கடேசன் விசாரித்த போது, தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் வெளியே சென்ற அவர், கத்தியுடன் மீண்டும் வந்து கண்ணாடி கதவுகளை தாக்கி உடைத்தார். தகலறிந்து போலீசார் வருவதைக் கண்ட தனசேகர், அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்