#Breaking|| RCB - லக்னோ ஐபிஎல் போட்டி தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் ஐதராபாத்தில் கைது

x

60 லட்ச ரூபாய் ரொக்க பணம், 5 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வங்கி டிபாசிட்டுகள், செல்போன்கள், லேப்டாப்கள், டெலிவிஷன் பெட்டி ஆகியவை பறிமுதல்.

கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பாக ஹைதராபாத்தில் பெருமளவில் சூதாட்டம் நடைபெறுவது பற்றிய

தகவல் ஹைதராபாத் போலீசாருக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையில் ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள சாய் அனுராக் காலனியில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த 10 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 60 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 5 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வங்கி டெபாசிட், சூதாட்டம் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், செல்போன்கள், லேப்டாப்கள், டிவி ஆகிவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

ஐபிஎல் சூதாட்டத்தின் முக்கிய சூத்திரதாரியாக இருந்த விஜயவாடாவை சேர்ந்த பாண்டு தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்