அடுத்தடுத்து 2 பள்ளிகளில் துப்பாக்கி சூடு -ஆனால் போலீசாரால் கைது செய்ய முடியாத நிலை | Gun Shot

x

பிரேசிலின் 2 பள்ளிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், இதுவரை 11 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரேசிலில் அடுத்தடுத்து 2 பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில், துப்பாக்கி சூடு நடத்தியதாக, பள்ளியின் முன்னாள் மாணவனும், போலீஸ்காரரின் மகனுமான இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் 18 வயதிற்குட்பட்டவர் என்பதால், அவரை போலீசார் கைது செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்