சித்த மருத்துவரின் தில்லாலங்கடி வேலை...ரகசியமாக குழந்தை விற்பனை...மருத்துவம் பார்க்க வரும் தம்பதிகளிடம் 'BRAIN WASH'

x
  • கடலூரில் சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்து வந்த பெண் சித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
  • கடலூர் மாவட்டம் வடலூரில் சித்த மருத்துவ கிளினிக்கை நடத்தி வருபவர் மெகருன்னிஷா.
  • 67 வயதான இவர், பல வருடங்களாக சித்த மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. புவனகிரி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
  • அப்போது அங்கே சித்த மருத்துவரான மெகருன்னிஷா குழந்தையை விற்றது தெரியவந்தது.
  • உடனே மெகருன்னிஷா, உடந்தையாக இருந்த சுடர்விழி, ஷீலா, ஆனந்தன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • குழந்தை இல்லாத தம்பதிகள் இவரிடம் சிகிச்சைக்கு வரும் நிலையில் அவர்களை மூளை சலவை செய்து சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை மெகருன்னிஷா விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்