பிபி நோயாளியின் உயிரோடு விளையாடிய ஆரம்ப சுகாதார நிலையம்

x

ராணிப்பேட்டையில் ரத்த அழுத்த மாத்திரைக்கு பதிலாக கொழுப்பு மாத்திரைகள் வழங்கியதாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாலாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவர், ரத்த அழுத்த பிரச்சினை தொடர்பாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

கடந்த மாதம் 12 -ஆம் தேதி மருந்துகள் வாங்க சென்றபோது ஊழியர்களின் அலட்சியத்தினால் ரத்த அழுத்த மாத்திரைக்கு பதிலாக கொழுப்பு மாத்திரைகள் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஜோதியின் மகன் சிவக்குமார், ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்