ஆற்றில் கிடைக்காத சிறுவன் உடல்..- என்னதான் ஆனது..? தொடரும் மர்மம்

x

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை, 5 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற சிறுவன், தனது இரு நண்பர்களுடன் கூட்டூர் வனப்பகுதி தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது அவன் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 15 பேர் கொண்ட தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில், தற்போது தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இறங்கியுள்ளனர். இருப்பினும் 5 நாட்களாக சிறுவன் கண்டுபிடிக்கப்படாததால், சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்