கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன்... திருமணம் செய்து கொள்ள நச்சரித்ததால் பயங்கரம்....

x

ரகசிய காதலனோட லாட்ஜ்ல தங்கி இருந்த ஒப்பனை கலைஞர் காலையில கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்காங்க.

தவறான உறவுக்கு அங்கிகாரம் தேடியது குற்றமா?


கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள தனியார் விடுதி.

போலீசார், தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், போட்டோகிராபர் என ஒரு பெரும்படையே அன்று விடுதியை விழிபிதுங்க வைத்தது.


அறை எண் 306 ல் அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அலற விட்டது.


உள்ளே கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறது ஒரு பெண்ணின் சடலம்.


கொல்லப்பட்டவர் உதுமா பகுதியை சேர்ந்த தேவிகா.34 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. MAKEUP ARTIST ஆக வேலை பார்த்து வந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று காசர்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு அழகு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லாட்ஜுக்கு வந்த தேவிகா இப்படி கொடுரமாக கொல்லப்பட்டிருகிறார்.

தேவிகாவை கொன்றது யார்...?என்ற கேள்விக்கே இங்கு இடம் இல்லை. காரணம் தேவிகாவை கொன்ற கொலைகாரன் கொலை செய்த கையோடு காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். அவரின் மூலமாகத்தான் போலீசுக்கே அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கிறது.

ஆம்....இந்த கொடுரத்தை செய்தவர் சதீஷ்.....தேவிகாலம் பகுதியை சேர்ந்தவர்.36 வயதான சதீஷுக்கு திருமணமாகி குடும்பம் உள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தேவிகாவுக்கும் சதீஷுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாற இருவரும் குடும்பத்திற்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ரகசிய காதலனை நிரந்தர புருஷனாக்க நினைத்திருக்கிறார் தேவிகா.

"நா என் கணவன டிவோர்ஸ் பண்ணிடுற... நீ உன்னோட ஒய்ஃப கழட்டி விட்டுடு... நம்ம ரண்டு பேரும் கல்யாணம் பன்னிட்டு சந்தோஷமா வாழலாம்" என சதீஷிடம் கூறி இருக்கிறார்.

சதீஷுக்கு காமத்தில் இனித்த கள்ளக்காதல், கல்யாணம் என்றவுடன் கசப்பாக தெரிந்திருக்கிறது."நாம எப்பவும் இப்படியே இருக்கலாம் செல்லம்" என்று கூறி தேவிகாவின் முடிவை தட்டி கழித்திருக்கிறார்.

ஆனால் கள்ளக்காதலனின் நினைவால், தனது குடும்பத்துடன் இயல்பாக வாழமுடியாமல் குழம்பி போன தேவிகா, கடந்த சில நாட்களாகவே தன்னை திருமணம் செய்து அழைத்து செல்லும் படி சதீஷை நச்சரித்து வந்துள்ளார்.

சதீஷும் எவ்வளவோ கதைகளை அள்ளிவிட்டு தேவிகாவை கழற்றி விட முயற்சித்திருக்கிறார். ஆனால் ஒன்றும் வொர்க் அவுட் ஆகவில்லை.

இந்நிலையில் தான் அழகு கலை நிகழ்ச்சிக்காக தேவிகாவை காசர்கோட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் சதீஷ். நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் லாட்ஜில் ரூம் போட்டு ஓய்வெடுத்திருக்கிறார்.

அப்போது தேவிகா மீண்டும் கல்யாண கதையை தொடங்கி இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியும் உள்ளார். கள்ளக்காதலியின் அந்த நச்சரிப்பு ஒரு கட்டத்தில் சதீஷுக்கு ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது.

அறையில் இருந்த கத்தியால், கவிபாடி மயக்கிய கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் சதீஷ். தேவிகா படுக்கையிலேயே துடிதுடித்து இறந்துவிட, அறையை பூட்டி சாவியை எடுத்து கொண்டு, நேராக காவல் நிலையத்தில் நடந்ததை கூறி சரணடைந்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சதீஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்