காதலியை கொன்றுவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய காதலன்..

x

பார்ப்பதற்கு மாடலை போல விதவிதமான போஸ்கொடுத்து பாய்ஸை கிரங்கடிக்கும் இவர் பண்டேலா வர்மா.உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். 25 வயதான பண்டேலா வர்மா மும்பையில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.இந்நிலையில் தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பண்டேலா கர்நாடக மாநிலம் யாத்கிரி அடுத்த அரகெரே பகுதியில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். நடந்திருப்பது நிச்சயம் கொலை தான் என உறுதி செய்த போலீசார் கொலையாளியை வலைவீசி தேடி இருக்கிறார்கள்.பண்டேலாவின் செல்போன் சிக்னல், அவர் கடைசியாக யாருடன் பேசினார் என்பதை எல்லாம் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

அதில் சடலம் கிடந்த கிராமத்தை சேர்ந்த மாருதி ரத்தோட் என்ற வாலிபரிடம் பண்டேலா அதிகமாக பேசி இருப்பது தெரியவந்திருக்கிறது. உடனே மாருதி ரத்தோடை தேடிய போது தான் போலீசாருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

மாருதி ரத்தோடு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வது போல ஒரு வீடியோ போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. கிடைத்த ஒரு தடையமும் இறந்து விட்டதால் என்ன செய்வதென்று புரியாமல் இருந்த போது தான் போலீசாருக்கு மற்றொரு துருப்பும் கிடைத்திருக்கிறது.

மாருதி ரத்தோடின் செல்போன் சிக்னல் மட்டும் பல இடங்களில் சுற்றி இருக்கிறது.உடனே அந்த சிக்னலை ட்ரேஸ் செய்த போது மாருதி ரத்தோடு கொலையை செய்து விட்டு, தற்கொலை நாடகமாடி போலீசாரை திசை திருப்ப முயற்சித்தது தெரிந்திருக்கிறது. 27 வயதான மாருதி ரத்தோட் வேறு யாருமல்ல... பண்டேலா வர்மாவின் ஆசை காதலன். மாருதி ரத்தோடும், பண்டேலாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.மாருதி ரத்தோடு பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார்.

ஆனால் பண்டேலா வர்மாவின் முழு நேர பணி ரீல்ஸ்...ரீல்ஸ்...ரீல்ஸ் தான். சமூக வலைதளங்களில் தன்னை எப்போதும் ஆக்டிவாக வைத்திருந்த பண்டேலா தினமும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு மூழ்கி திளைத்துள்ளார்.

இதனால் பண்டேலாவுக்கு பல ஆண் நண்பர்களின் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் தனியாக ரீல்ஸ் செய்து வீடியோ போட்ட பண்டேலா பின்பு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ போட்டிருக்கிறார்.அந்த ரீல்ஸ் எல்லாம் வைரலாகி விட, பண்டேலாஆண் வீடியோ போடுவதை வழக்கமாக்கி உள்ளார்.ஆனால் தனது காதலி பிற ஆண்களுடன் காதல் வசனங்களிலும், பாடல்களிலும் நெருங்கி ரீல்ஸ் போடுவதை மருதி ரத்தோடால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் காதலியிடம் ஆண்களுடன் ரீல்ஸ் போடுவதை நிறுத்தமாறு கண்டிப்புடன் கூறி இருக்கிறார்.ஆனால் அதை எல்லாம் பண்டேலா கேட்பதாக இல்லை.தொடர்ந்து ரீல்ஸ் போட்டிருக்கிறார். காதலியின் இந்த அடாவடி செயல்கள் மாருதி ரத்தோடுக்கு ஆத்திரத்தை கிளப்பி இருக்கிறது.தனக்கு சொந்தமானவள் மற்ற ஆண்களுடன் நெருக்கம் காட்டுவது பிடிக்கவில்லை என்றாலும்,அதை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல காதலியுடன் அவுட்டிங் சென்றிருக்கிறார்.அன்றைய தினம் பண்டேலாவை தனது வீட்டிற்கே அழைத்து சென்றிருக்கிறார் மாருதி ரத்தோடு.அங்கே இருவரும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.

அப்போது மீண்டும் ரீல்ஸ் பேச்சு எழுந்திருக்கிறது. அது முடிவில் வாக்குவாதமாக மாற,ஆத்திரம் தலைக்கேறிய மாருதி ரத்தோட் உல்லாசத்தின் போதே காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார். கொலையை மறைக்க சடலத்தை ஆளில்லாத பகுதிக்கு எடுத்து சென்று தீவைத்து எரித்திருக்கிறார்.விசாரனை முடிவில் மாருதி ரத்தோடை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்