சித்தாள் விக்கியிடம் விழுந்த பள்ளி மாணவிகள்.. நண்பர்களுக்கு காதலியை விருந்தாக்கிய கொடூரம்...குட்டி பகவதி போல் இவர் ஒரு 'குட்டி காசி'

x
  • பகவதி படத்தில் சின்ன பகவதி என பில்டப் கொடுக்கும் வடிவேலு போல நாகர்கோவில் காசிக்கு அடுத்து நான் தானாக்கும் என வாண்டட் ஆக வந்து வண்டியில் ஏறியிருக்கிறார் விக்கி என்கிற விக்னேஷ்...
  • கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை எல்லாம் தேடித்தேடி தன் வலையில் வீழ்த்திய காசி போல விக்னேஷ் விரித்த வலையில் சிக்கிய அனைவரும் சிறுமிகள் என்பது தான் சோகம்...
  • கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ். 24 வயதாகும் இவர் கட்டுமான பணியில் சித்தாளாக வேலை பார்த்து வருகிறார்.
  • இவரின் தந்தை செல்வம் உயிரிழந்த நிலையில் குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த விக்கி அதை எல்லாம் மறந்து விட்டு ரோமியோவாக சுற்றி வந்திருக்கிறார்...
  • பள்ளி படிக்கும் சிறுமிகளிடம் நட்பாக பழகி பின்னர் காதல் என வலை விரித்து கடைசியில் அவர்களை தன் வலையில் வீழ்த்துவது தான் இவரின் வாடிக்கையாக இருந்திருக்கிறது...
  • காதலில் விழுந்த சிறுமிகளை எல்லாம் கடத்திச் சென்று 2 முதல் 4 நாட்கள் வரை ஒரு இடத்தில் வைத்து அவர்களை தன் தேவைக்கு பயன்படுத்தி விட்டு பின்னர் அவர்களை கழற்றி விடுவது தான் இவரின் வாடிக்கையாம்..
  • கடந்த 2020ல் ஒரு சிறுமியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு விருந்தாக்கி இருக்கிறார் விக்னேஷ். அப்போது அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்னேஷ் உட்பட 3 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • அதேபோல் வடசேரி காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு, கஞ்சா வழக்கு, கருங்கல் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு என 4 வழக்குகள் விக்னேஷ் மீது உள்ளதாம்.. இந்த சூழலில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று வழக்கம் போல தன் வேலையை காட்டியிருக்கிறார்...
  • இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 2வது முறையாக விக்னேஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த வேலைக்கும் போகாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றுவதும், விதவிதமான உடைகளை போட்டுக் கொண்டு ரோமியோ போல பள்ளி, கல்லூரி முன்பாக நின்று சீன் போடுவதையுமே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார் இந்த குட்டி காசி...
  • 2 முறை போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டும் போலீசாரிடம் பிடிகொடுக்காமல் தப்பி வரும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • நாகர்கோவில் காசி சம்பவமே இன்னமும் மனதை விட்டு அகலாத நிலையில் இப்போது அடுத்த அதிர்ச்சி தந்திருக்கிறார் விக்னேஷ்.. விக்னேஷ் பிடிபட்டால் அவரால் வாழ்க்கையை தொலைத்த சிறுமிகள் யார் என்ற முழு விபரமும் வெளிச்சத்திற்கு வரும்...

Next Story

மேலும் செய்திகள்