நடுரோட்டில் பறந்து பறந்து ஸ்டண்ட்.. அப்படியே பாயிஸை பார்சல் செய்த போலீஸ்.. sorry sir' இளைஞர்களின் வீடியோ வைரல்

x

சென்னையில் நடுரோட்டில் ஸ்டண்ட் செய்து, வீடியோ பதிவிட்ட இளைஞர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர்.

சென்னை விவேகானந்தர் இல்லம் அருகே, இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் பைக்கில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வீடியோவில் பதிவான அடையாளங்களை வைத்து, விசாரணை நடத்திய போலீசார், ஸ்டண்ட் செய்த இளைஞர் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் உட்பட மூவரை கைது செய்தனர். பிடிப்பட்ட அந்த இளைஞர்கள் இனி இது போன்று செய்யமாட்டோம் என மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

யாரும் பொது இடத்தில் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து போலீசார் அந்த மூன்று இளைஞர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்