விளையாட்டு வினையான பரிதாபம்.. தூக்கி வீசப்பட்டு சிறுவன் பலி - சென்னையில் கோரம்

x

சென்னையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் கல்யாணபுரத்தை சேர்ந்த சிறுவன் தஷ்வந் தேவா, மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை காலம் என்பதால் வீட்டின் முன்பு சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென பெய்த மழையின் காரணமாக அருகில் உள்ள மின் கம்பத்தின் ஒயர் அறுந்து தொங்கியது. இதனை எதிர்பாராத விதமாக கையில் பிடித்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தான்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்