மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

x

ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் நவீன்.

தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த நவீன், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, பால்கனியில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற போது, அருகில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் நவீன் மீது பாய்ந்தது.

இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்