PVR மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மும்பையில் பரபரப்பு

x

மும்பையில் மக்கள் கூடும் பல்வேறு பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், அந்தேரி மால், பிவிஆர் மால் மற்றும் விமான நிலையத்தில் சஹாரா ஹோட்டலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அந்த பகுதிகளுக்கு பாதுகாப்பை தீவிரப்படுத்திய போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்