நாடுவானில் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... அவசர அவசரமாக குஜராத்தில் தரையிறக்கம்

x

ரஷ்யாவில் இருந்து கோவா வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்த‌தால் அவசர‌மாக குஜராத்தில் தரையிறக்கப்பட்டது. கோவாவில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்த‌தால், விமானத்திற்கு அவசரமாக தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, குஜராத்தின் ஜாம் நகர் விமானப்படை தளத்தில் பலத்த பாதுகாப்புடன் விமானம் தரையிறக்கப்பட்டு, பயணிகள், ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமானத்தில் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனை மேற்கொண்டனர். விமானத்தில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாத‌தால், மிரட்டல் ஒரு புரளி என உறுதி செய்யப்பட்ட பிறகு விமானம் கோவாவுக்கு புறப்பட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்