மேயர் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்த பயங்கரவாதிகள் - ராணுவ வீரர்கள் கொடுத்த தரமான பதிலடி

x

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மேயர் அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் மொகாதிசுவில் அமைந்துள்ள மேயர் அலுவலகத்தின் சுற்றுச் சுவரை குண்டு வைத்து தகர்த்த அல்கொய்தா ஆதரவு அல் ஷபாப் பயங்கரவாதிகள், உள்ளே நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்... இதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேயர் அலுவலகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சோமாலியா ராணுவ வீரர்கள், எதிர்த் தாக்குதல் நடத்தி 6 பயங்கரவாதிகளைக் கொன்று குவித்தனர்.மேயர் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்த பயங்கரவாதிகள் - ராணுவ வீரர்கள் கொடுத்த தரமான பதிலடி


Next Story

மேலும் செய்திகள்