ஆலங்கட்டி மழையில் திடீரென இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை - 7 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்

x

பொலிவியாவில் பெய்த ஆலங்கட்டி மழையால் பள்ளியின் மேற்கூரை இடிந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். சான்டியாகோ டி பச்சாரியா பகுதியில் உள்ள பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் இரும்பினால் ஆன பள்ளியின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்