நடுரோட்டில் தலை துண்டித்து கிடந்த இளைஞர் உடல்.. - அதிர்ந்து நின்ற கன்னியாகுமரி

x

கன்னியாகுமரி அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில், தலை துண்டான நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் காணிமடம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், ரஸ்தாகாடு நான்கு வழி சாலை பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவரது உறவினர்கள், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படும் வரை உடலை வாங்கமாட்டோம் என கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்