முறையற்ற உறவால் சென்னை ஏரியில் மிதந்த உடல்

x

சென்னை வேளச்சேரியில் முறையற்ற உறவால் பிறந்த குழந்தையை கணவருக்கு தெரியாமல் ஏரியில் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி சசிநகர் ஏரியில், பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சங்கீதா என்ற பெண் அதே பகுதியில் வசிக்கும் ஒரு மளிகை கடைக்காரருடன், முறையற்ற உறவில் இருந்ததாகவும், அதன் மூலம் கர்ப்பம் அடைந்து குழந்தை பிறந்ததும் தெரிய வந்தது. மேலும், இது பற்றி கணவருக்கு தெரியக்கூடாது என்பதற்காக, குழந்தையை ஏரியில் வீசிச் சென்றதாகவும் அந்த பெண் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, குழந்தை யாருடையது என கண்டறிய டிஎன்ஏ சோதனைக்கு பரிந்துரைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்