படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வீடு திரும்பிய மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... செய்வது அறியாமல் திகைத்துப் போன மீனவர்கள்

x

கடலூர் துறைமுகம் அருகே உள்ள அக்கரைகோரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் அங்கே இருந்த படகுகள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் படகில் இருந்த வலைகளும் தீப்பிடித்து எரிந்த நிலையில் உடனே பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருந்த போதிலும் 8 படகுகள் மற்றும் வலைகள் முற்றிலும் எரிந்து சேதமாகின. தகவல் அறிந்து வந்த கடலூர் துறைமுக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் சிலர் படகில் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்