"படகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தர வேண்டும்" - இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை

x

"படகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தர வேண்டும்" - இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் தமிழக, புதுச்சேரி மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்து நீரில் மூழ்கி வருவதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் படகுகள் அனைத்தும், நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மயிலடி உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகளில் பெரும்பாலானவை சேதம் அடைந்து நீரில் மூழ்கி இருப்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிய படகுகள் நீரில் மூழ்கி சேதமாகி இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தப் படகுகளை விரைந்து மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்