மெரினா சாலைக்கு வந்த படகுகள்.. குவிந்த கூட்டம்.. தலைநகரில் பரபரப்பு

மெரினா சாலைக்கு வந்த படகுகள்.. குவிந்த கூட்டம்.. தலைநகரில் பரபரப்பு
Published on

இரண்டாவது நாளாக மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.200 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு..

மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை...

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியை கண்டிக்கும் விதமாக நொச்சிக்குப்கம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லாமல் ஒன்று கூடி போராட்டம் நடத்த உள்ளனர்.

சென்னை பட்டினம்பாக்கம் இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் சென்னை மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது இடையூறு செய்பவர்களை கைது செய்ய 200க்கும் மேற்பட்ட காவலர்கள் லூப் சாலையில் குவிப்பு

உயர் நீதிமன்ற உத்தரவின் படி, லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை

ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் இல்லை என அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உயர் நீதிமன்ற உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com