குற்றாலத்தில் தொடங்கியது படகு சவாரி... திறந்து வைத்த ஆஸ்திரேலிய பெண் - சுற்றுலா பயணிகள் படு குஷி..!

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம்உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த ஆண்டு படகு சவாரி தொடங்கியது. எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ பழனி நாடார் ஆகியோர் படகு சவாரியை தொடங்கி வைக்க வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுற்றுலா பயணியைஅழைத்து படகு குழாமை திறக்க வைத்து படகு சவாரியை தொடங்கி வைத்தனர். மிதி மற்றும்துடுப்பு படகுகள் என மொத்தம் 31 படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்