கணவரை காண கள்ளத்தோணி திட்டம் - கடைசி நொடியில் நடந்த ஷாக் !

x

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து கள்ள தோணியில் இலங்கை செல்ல முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார், அவருக்கு உதவியதாக கூறி 3 பேரை கைது செய்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த ஷேக் கஜிதா கதிம் என்ற பெண் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கள்ளத்தோணியில் பயணம் செய்வதற்காக ராமேஸ்வரத்தில் தங்கி இருந்துள்ளார். இது குறித்து ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், சகாயம், அழகுநாதன், பூபதி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இலங்கை சேர்ந்த பெண்ணை கள்ளத் தோணியில் சட்ட விரோதமாக அனுப்ப முற்பட்டது ஏன்? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்