கேரளாவை உலுக்கிய படகு விபத்து - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!..

x

மலப்புரம் தனூர் படகு விபத்தில், உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடலுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நடைபெற்ற திருரங்கடி தாலுகா மருத்துவமனைக்கு சென்று, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, பரப்பனங்காடி பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்ற அவர், உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று, இறுதி அஞ்சலி செலுத்தினார். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவ செலவினை அரசு முழுமையாக அரசு ஏற்கும் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன், விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்