"பாஜகவின் விலை பேசும் போக்கு நாட்டுக்கே ஆபத்து" - திமுக எம்பி டி.ஆர்.பாலு காட்டம்

x

ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என,

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தெலங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி எம்எல்ஏக்கள் 4 பேரை, தங்கள் பக்கம் இழுப்பதற்காக பா.ஜ.க. தரப்பில் நடத்தப்பட்ட பண பேரம் குறித்த தகவல் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மந்தைகளல்ல என்பதையும் பா.ஜ.க. நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதற்காக, ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியல் சட்டத்தின் மாண்புகளையும் - கட்சித் தாவல் தடை சட்டத்தையும் காலில் போட்டு மிதித்தபடி, மாநிலக் கட்சிகளின் அரசுகளுக்கு நெருக்கடியை உண்டாக்க நினைக்கும் 'கரன்சி பாலிடிக்ஸ்' கலாசாரத்தை இந்திய மக்கள் எந்தக் காலத்திலும் ஏற்க மாட்டார்கள் என குறிபிட்டுள்ளார். ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள் என்றும், அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்