வெளிநாடு சென்ற பாஜக பெண் நிர்வாகி...அட்டகாசம் செய்த மர்ம நபர்கள் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

ஜெயங்கொண்டம் அருகே, பாஜக பெண் நிர்வாகிக்கு சொந்தமான கம்பி வேலி மற்றும் சிமெண்ட் சீட் கொட்டகையை மர்ம கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. பல் மருத்துவரான இவர், பாஜக மருத்துவர் அணி மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், பரமேஸ்வரி வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ள சூழலில், முன் விரோதம் காரணமாக அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி மற்றும் சிமெண்ட் சீட் கொட்டகையை அடித்து நொறுக்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்