ஏழைகளை மட்டுமே குறிவைத்த பாஜக.. கர்நாடக அரசு எடுத்த அதிரடி ஆக்சன் - இடித்து தள்ளபட்ட சொகுசு பங்களா

x

பெங்களூருவில், ஏழைகளை மட்டும் குறிவைத்து மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடத்தப்படுவதாக கூறப்பட்ட நிலையில், பிரபல சொகுசு பங்களா குடியிருப்பின் கிளப் ஹவுஸ், இடித்து தகர்க்கப்பட்டது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் ஒட்டுமொத்த நாட்டில் பேசும் பொருளாக மாறி இருந்தது. இதைத்தொடர்ந்து அப்போதைய பாஜக அரசு உடனடியாக மழை நீர் வடிகால் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதன்படி ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடிகால் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்திருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டன. ஏழைகளை மட்டும் குறிவைத்து ஆக்கிரமிப்பு அகற்றம் நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, பிரபல சொகுசு பங்களா குடியிருப்பின் கிளப் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்