பாஜக மாவட்ட தலைவர் பேனர் கிழிப்பு.. "கட்சியினரே கிழித்தனரா..?" - ராமநாதபுரத்தில் பரபரப்பு

x
  • ராமநாதபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மாவட்ட தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • இஎம்டி கதிரவன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிதாக தரணி முருகேசன் என்பவரை ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்திருந்தார்.
  • புதிதாக பொறுப்பேற்ற தரணி முருகேசனுக்கு நேரிலும் விளம்பர பதாகைகள் வைத்தும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  • அப்படியாக, கேணிக்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர்.
  • முன்னாள் மாவட்ட தலைவரின் ஆதரவாளர்கள் சிலர் பேனரைக் கிழித்ததாக கூறப்படுகிறது.
  • இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்