ஆர்ப்பாட்டத்தின் போது சிதறிய கூட்டம் - "இந்த மழைக்கெல்லாம் அஞ்ச கூடாது" - மைக்கில் அழைத்த பாஜக நிர்வாகி

x

ஆர்ப்பாட்டத்தின் போது சிதறிய கூட்டம் - "இந்த மழைக்கெல்லாம் அஞ்ச கூடாது" - மைக்கில் அழைத்த பாஜக நிர்வாகி


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், மழையால் சிதறி சென்ற பாஜக கூட்டத்தை, 'இந்த மழைக்கெல்லாம் அஞ்ச கூடாது' எனக்கூறி பாஜக நிர்வாகி மீண்டும் அழைத்தார். தாம்பரத்தில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தின் போது திடீரென மழை பெய்ததால் பாஜக நிர்வாகிகள் சிதறி சென்று, அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைந்தனர். இதை பார்த்த பாஜக நிர்வாகி, இந்த மழைக்கெல்லாம் அஞ்ச கூடாது என்றும், பாஜக கட்டுப்பாடான கட்சி என்றும் கூறி அனைவரையும் மீண்டும் அழைத்தார். இதையடுத்து நிர்வாகிகள் குடையுடன் வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்