தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக பாஜகவினர் அர்ஜூனனாக செயல்பட வேண்டும்" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

x

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக பாஜகவினர் அர்ஜூனனாக செயல்பட வேண்டும்" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

சோனியா காந்தியின் மருமகன் போன்று ஸ்டாலினின் மருமகனும் தமிழகத்தில் சொத்துக்களை வாரி குவித்து வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூரில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தினந்தோறும் ஊழல்களை செய்து வரும் திமுகவை எதிர்த்து பாஜக அனுதினமும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். பகவத் கீதையில் எப்படி கிருஷ்ணன் சாரதியாக செயல்பட்டு அதர்மம் தலை தூக்கும் பொழுது தர்மத்தை வென்று நிலைநாட்டினாரோ , அதேபோல சாரதியாக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராகவும் , ஊழல் திமுக அரசாங்கத்துக்கு எதிராகவும், ஒவ்வொரு தொண்டரும் அர்ஜுனனாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கூறினார். மேலும் சோனியா காந்தியின் மருமகன் போன்று ஸ்டாலினின் மருமகனும் தமிழகத்தில் சொத்துக்களை வாரி குவித்து வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்