"பாஜக எம்எல்ஏ -வை காணவில்லை..." - சலசலப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்

x

பாஜக எம்எல்ஏ விருபாக்சப்பாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உள்ளது. லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸாரால் கடந்த ஆறு நாட்களாக பாஜக எம்எல்ஏ விருபாக்சப்பா தேடப்பட்டு வருகிறார். இதனிடையே, முன்ஜாமின் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமின் வழங்கியது. மேலும் 48 மணி நேரத்திற்குள் லோக் ஆயுக்தா முன் விசாரணைக்கு ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் விருபாக்சப்பாவைக் காணவில்லை என பெங்களூர் நகரில் போஸ்டர்கள் ஒட்டி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்