அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பம்..போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதம்..!

x

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர். அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை அகற்றச் சென்ற போலீசாருக்கும், பாஜக பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கொடிக் கம்பம் வைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறியதால், அவர்களுடன் பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக்கம்பம் மட்டுமன்றி, இடதுசாரி கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் போலீசார் அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்