மத்திய இணை அமைச்சர் முன் ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட பாஜக - திமுக நிர்வாகிகள்

x

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில், குருவாயூர், கச்ச கவுடா ரயில்கள் நின்று செல்லும் சேவையை தொடங்கி வைத்த போது, திமுக - பாஜக நிர்வாகிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குருவாயூர், கச்ச கவுடா ரயில்கள் நின்று செல்லும் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது, திமுக - பாஜக நிர்வாகிகள் ரயில் நிலையத்தில் அங்கும், இங்கும் ஓடி தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, நடைமேடையில் கூடிய இரு கட்சி நிர்வாகிகளையும் போலீசார் அப்புறப்படுத்தி, கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்