ரயிலில் விஷம் கலந்த பிஸ்கெட் -ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு நடந்த சோகம்.. - அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

x

உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் கலந்த பிஸ்கெட்டை சாப்பிட்டதால் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். எட்டவா ரயில் நிலையம் அருகே மருதார் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது, ரயிலில் 4 பேர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்த‌த‌து. இதையடுத்து, அவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணையில், அடையாளம் தெரியாத நபர் கொடுத்த பிஸ்கெட்டில் விஷம் கலந்திருந்த‌து தெரிய வந்த‌து. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மயக்க மருந்து கலந்த பிஸ்கெட் கொடுத்த காலம் மாறி, விஷம் கலந்து பிஸ்கெட் கொடுத்திருப்பது ரயில் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்