5 வயதான எருமை மாட்டுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்... மாட்டின் உரிமையாளர் கேக் வெட்டி உற்சாகம்

x

கேரள மாநிலம் மலப்புரத்தில் எருமை மாடு வளர்த்து வரும் உரிமையாளர் ஒருவர், அதற்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது

மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காளிக்காவு பகுதியைச் சேர்ந்த பஷீர் என்பவர் ராஜமாணிக்கம் என்ற பெயரில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், அந்த எருமை மாட்டுக்கு 5 வயது ஆன நிலையில், பஷீர் பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தார்.

அதன்படி, காளிக்காவு பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில், ராஜமாணிக்கத்திற்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இதனிடையே, ராஜமாணிக்கம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் இணக்கமாக வாழ்வதாகவும், எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்