"பைக்கை தலைக்கு மேல் தூக்கி சாகசம்" ...மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

x

நாமக்கல் அருகே உரிய அனுமதியின்றி நடத்தப்பட்ட பைக் ஷோ குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் சிலர், ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகே 8-ம் தேதி பைக் ஸ்டண்ட் ஷோ நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை முதலே இந்த பைக் ஸ்டண்ட் ஷோவானது நடைபெற்றது.

இதில் பைக்குகளை வைத்து அந்தரத்தில் பறந்தும் ஒற்றை சக்கரத்தில் பைக்கை தூக்கி வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் கைகளை விட்டபடியே பைக்கை ஒட்டியும் சாகசம் செய்தனர்.

இதற்கு பார்வையாளர்களாக செல்லுபவர்களுக்கு 500 ரூபாய் நுழைவு கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த சூழலில் இந்த ஸ்டண்ட் ஷோ நடத்துவதற்கு காவல்துறையினரின் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே உரிய அனுமதியின்று இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று, காவல்துறை எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்