பக்காவா பிளான் போட்டும் சிக்கிய பைக் திருடன்.. பாட் பாட்டா பிரித்து எடுத்த மக்கள்

x

குலசேகரம் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை, பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரியின் குலசேகரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீகண்டனின் இருசக்கர வாகனம், அண்மையில் திருடு போயுள்ளது. இந்தநிலையில் செறுதிக்கோணம் அரியாம்பகோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனங்களை பிரித்து வைத்திருப்பதாக ஸ்ரீகண்டனுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஸ்ரீகண்டன் நேரில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞர் பிரித்து வைத்திருந்தது அவருடைய வாகனம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சுமித் என்ற அந்த இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்